என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திட்டக்குடி அருகே நாகவள்ளி அம்மன் கோவிலில் தீ விபத்து
Byமாலை மலர்23 Nov 2021 10:25 AM GMT (Updated: 23 Nov 2021 10:25 AM GMT)
திட்டக்குடி அருகே நாகவள்ளி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் நந்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையோரம் நாகவள்ளி அம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மாதவன் உள்ளார்.
நேற்று மாலை கோவிலின் உள்ளே இருந்து மின் ஒயர் கருகி துர்நாற்றத்துடன் கரும்புகை வெளியேறியது. அவ்வழியே சென்றவர்கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் வசந்தராஜன் தலைமையிலான வீரர்கள் வருவதற்குள் தீயை அப்பகுதி இளைஞர்கள் அணைத்தனர். என்றாலும் அம்மனுக்கு சாற்றும் பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென கோவிலில் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் நந்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையோரம் நாகவள்ளி அம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மாதவன் உள்ளார்.
நேற்று மாலை கோவிலின் உள்ளே இருந்து மின் ஒயர் கருகி துர்நாற்றத்துடன் கரும்புகை வெளியேறியது. அவ்வழியே சென்றவர்கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் வசந்தராஜன் தலைமையிலான வீரர்கள் வருவதற்குள் தீயை அப்பகுதி இளைஞர்கள் அணைத்தனர். என்றாலும் அம்மனுக்கு சாற்றும் பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென கோவிலில் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X