search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி-முதல்வர் மு.க. ஸ்டாலின்

    வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    அந்த வகையில், இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

    இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!

    மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

    உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்!

    அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. விவசாயிகளின் தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது - எதிர்க்கட்சிகள் கருத்து
    Next Story
    ×