என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 2வது நாளில் விபரீத முடிவு- புதுப்பெண் தற்கொலை
Byமாலை மலர்18 Nov 2021 3:59 AM GMT (Updated: 18 Nov 2021 3:59 AM GMT)
வேலூரில் திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்:
வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு புவனேஸ்வரி (வயது 21) மற்றும் 2 மகன்கள். புவனேஸ்வரி காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் (28) என்பவருக்கும் கடந்த 15-ந்தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புதுமண தம்பதி மணமகள் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி உள்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் புவனேஸ்வரியின் பாட்டி பாப்பாம்மாள் கழிவறைக்கு செல்ல முயன்றார். அப்போது, கழிவறையின் கதவை அவரால் திறக்க முடியவில்லை.
அதையடுத்து அவர் தூங்கிக்கொண்டிருந்த பேரன் சிவாவை எழுப்பி கழிவறை கதவை திறக்க சொன்னார். சிவா கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் கதவை தட்டி போதும் உள்ளே இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
அதைத்தொடர்ந்து சிவா வீட்டின் வெளியே சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். உள்ளே சேலையால் தூக்குப்போட்டு புவனேஸ்வரி தொங்கி கொண்டிருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா கதறி அழுதார். உடனே குடும்பத்தினர், புவனேஸ்வரியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், புவனேஷ்வரிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் தொடர்ந்து படிக்க விரும்பி உள்ளார். ஆனால் அவரது பெற்றோர் நல்ல வரன் என்பதால் மணிகண்டனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளனர். அவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் மணிகண்டன் செல்போனில் 3 முறை புவனேஸ்வரியிடம் பேசி உள்ளார். ஆனால் புவனேஸ்வரி ஒருமுறை கூட மணிகண்டனுக்கு போன் செய்து பேசியது இல்லை என்று கூறப்படுகிறது.
விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு புவனேஸ்வரி (வயது 21) மற்றும் 2 மகன்கள். புவனேஸ்வரி காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் (28) என்பவருக்கும் கடந்த 15-ந்தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புதுமண தம்பதி மணமகள் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி உள்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் புவனேஸ்வரியின் பாட்டி பாப்பாம்மாள் கழிவறைக்கு செல்ல முயன்றார். அப்போது, கழிவறையின் கதவை அவரால் திறக்க முடியவில்லை.
அதையடுத்து அவர் தூங்கிக்கொண்டிருந்த பேரன் சிவாவை எழுப்பி கழிவறை கதவை திறக்க சொன்னார். சிவா கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் கதவை தட்டி போதும் உள்ளே இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
அதைத்தொடர்ந்து சிவா வீட்டின் வெளியே சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். உள்ளே சேலையால் தூக்குப்போட்டு புவனேஸ்வரி தொங்கி கொண்டிருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா கதறி அழுதார். உடனே குடும்பத்தினர், புவனேஸ்வரியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், புவனேஷ்வரிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் தொடர்ந்து படிக்க விரும்பி உள்ளார். ஆனால் அவரது பெற்றோர் நல்ல வரன் என்பதால் மணிகண்டனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளனர். அவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் மணிகண்டன் செல்போனில் 3 முறை புவனேஸ்வரியிடம் பேசி உள்ளார். ஆனால் புவனேஸ்வரி ஒருமுறை கூட மணிகண்டனுக்கு போன் செய்து பேசியது இல்லை என்று கூறப்படுகிறது.
விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X