என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலப்பாளையத்தில் தொழிலதிபரின் மனைவி, மகன் திடீர் மாயம்
Byமாலை மலர்16 Nov 2021 11:14 AM GMT (Updated: 16 Nov 2021 11:14 AM GMT)
மேலப்பாளையத்தில் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
மேலப்பாளையத்தில் உள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அகமது மைதீன். தொழிலதிபரான இவர் தருவை பகுதியில் குடிநீர் கேன்- பாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி பஷிதா பேகம் (வயது28). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அகமது மைதீன் தனது நிறுவனத்திற்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி பஷிதாபேகம் மற்றும் கடைசி மகன் இஷால் (4) ஆகிய 2 பேரையும் காணவில்லை. பக்கத்து வீடுகளில் விசாரித்த போதும் அவர்களை பற்றிய தகவல்கள் தெரியவில்லை
இது குறித்து அகமது மைதீன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஷிதாபேகம், அவரது மகன் இஷால் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X