search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    மேலப்பாளையத்தில் தொழிலதிபரின் மனைவி, மகன் திடீர் மாயம்

    மேலப்பாளையத்தில் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    மேலப்பாளையத்தில் உள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அகமது மைதீன். தொழிலதிபரான இவர் தருவை பகுதியில் குடிநீர் கேன்- பாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பஷிதா பேகம் (வயது28). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அகமது மைதீன் தனது நிறுவனத்திற்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி பஷிதாபேகம் மற்றும் கடைசி மகன் இஷால் (4) ஆகிய 2 பேரையும் காணவில்லை. பக்கத்து வீடுகளில் விசாரித்த போதும் அவர்களை பற்றிய தகவல்கள் தெரியவில்லை

    இது குறித்து அகமது மைதீன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஷிதாபேகம், அவரது மகன் இஷால் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×