search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    குலசேகரம் அருகே கடையை உடைத்து 500 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு

    குலசேகரம் அருகே கடையை உடைத்து 500 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் சிங்காராயன் டோமினிக் (63) இவர் திருநந்திகரை கூட்டுறவு வங்கி அருகில் ரப்பர் சீட் உலற வைக்கும் குடோன் வைத்து இருக்கிறார். இவர சுமார் 21 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள சிறு ரப்பர் வியாபாரிகளிடம் இருந்து ரப்பர் சீட் வாங்கி உலர வைத்து அதை மொத்தமாக வெளியூர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை ரப்பர் சீட் குடோனில் உலற வைத்து விட்டு இரவு குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    மறுநாள் காலையில் குடோனில் வேலை பார்க்கும் தொழிலாளி வந்து பார்க்கும் போது குடோன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குடோன் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது குடோனில் உலர வைத்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 500 கிலோ ரப்பர் சீட் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே குலசேகரம் போலிசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் வந்து குடோனில் அமைக்கப்பட்டியிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது திருடன் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து சிசிடிவி கேமராக்களை திசை மாற்றி வைத்துவிட்டு குடோன் முழுவதும் சுற்றி வருவது தெரிந்தது. அவன் தலையில் இருந்த உடம்பு முழுவதும் துணியில் மூடி இருக்கிறது. திருடன் கேமராக்களை திசை மாற்றி வைத்ததால் வேறு எதுவும் தெரியவில்லை. இந்த திருட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டும் ஈடுபட வாய்ப்பு இல்லை இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்துதான் திருடியிருக்கிறார்கள் என்று குலசேகரம் போலிசார் சந்தேகிக்கிறார்கள்.

    கடந்த சில மாதங்களில் அரமன்னம், மணியன்குழி, நாகக்கோடு, மங்கலம், கோதையாறு, மாமூடு, கான்வெண்ட் போன்ற பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து உள்ளது. இதுவரைக்கும் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட ரப்பர் சீட் கடைகளில் இருந்து ரப்பர் சீட் திருடப்பட்டுயிருக்கிறது. இதுவரை யாரும் சிக்கவில்லை. இதனால் குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளிடத்தில் பெரும் அச்சம் நிலவுகிறது.

    தற்போது தினமும் இரவு நேரங்களில் சுமார் ஒரு மாதமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் சீட்டின் விலை உயர்ந்து உள்ளது. இதை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு இரவு நேரங்களில் ரோந்து வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×