search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    முன்னீர்பள்ளம் அருகே பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

    முன்னீர்பள்ளம் அருகே பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல், நயினார் குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சந்திரா (வயது 61). இவருக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.

    நேற்று அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் அருகில் உள்ள கடைக்கு டீ வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது மனம் உடைந்த சந்திரா, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×