என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தீ விபத்து
கிருஷ்ணகிரி தனியார் பல் மருத்துவமனையில் தீ விபத்து- ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
By
மாலை மலர்10 Nov 2021 10:27 AM GMT (Updated: 10 Nov 2021 10:27 AM GMT)

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் முதல் மாடியில் ஒரு தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று காலை திடீரென புகை வந்துள்ளது. அதை பார்த்த அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, நிலைய அலுவலர் மோகன்குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், சோபா போன்றவை எரிந்து சேதமானது. அதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.
தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். பல் மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் முதல் மாடியில் ஒரு தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று காலை திடீரென புகை வந்துள்ளது. அதை பார்த்த அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, நிலைய அலுவலர் மோகன்குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், சோபா போன்றவை எரிந்து சேதமானது. அதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.
தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். பல் மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
