என் மலர்
செய்திகள்

கனமழை
கனமழை எதிரொலி - கடலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கடலூரில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் 11-ம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
Next Story