search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    தாதா சாகேப் பால்கே விருது- நடிகர் ரஜினிகாந்துக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

    தமிழ் மக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட சகோதரர் ரஜினிகாந்தின் கலை உலக சாதனையை தமிழக மக்களைப்போலவே மத்திய அரசும் அங்கீகரித்து இருக்கிறது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட சகோதரர் ரஜினிகாந்தின் கலை உலக சாதனையை தமிழக மக்களைப்போலவே மத்திய அரசும் அங்கீகரித்து இருக்கிறது. இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×