search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராஜபாளையத்தில் தி.மு.க. கொடி கம்பத்தில் தூக்கில் தொங்கிய காவலாளி

    ராஜபாளையத்தில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் உள்ள கயிற்றில் தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். 2 மகன்களும் தனியாக வசித்து வருகின்றனர்.

    மாரியப்பன் அவ்வப்போது மகன்களை சந்தித்து பணம் வாங்கி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்களாக அவர் மகன்களை பார்க்க வரவில்லை. இதனால் அவரை தேடியபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் உள்ள கயிற்றில் தூக்குப்போட்டு மாரியப்பன் தற்கொலை செய்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் மலைக்கனி (62) புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×