search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி‌ஷம்
    X
    வி‌ஷம்

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து பெண் உயிரிழப்பு

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி விஜி (வயது 50 ). இவர் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த விஜி வீட்டில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×