search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் கொம்பையா. இவருடைய மனைவி இந்திராணி (வயது 47). இவரும், இவருடைய உறவினர் முருகன் என்பவருடைய மகள் பிரியாவும் (21). சூளை பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் 2 பேரும் ஒன்றாக வேலைக்கு நடந்து சென்றனர்.

    டிபார்மென்டல் ஸ்டோர்ஸ் அருகில் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் இந்திராணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். பிரியா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இந்திராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரியாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×