என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    அறந்தாங்கி அருகே புதுப் பெண் மாயம் கடத்தலா? போலீஸ் விசாரணை

    அறந்தாங்கி அருகே புதுப் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்ப்பவளக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் செல்வக்குமார் (35) இவருக்கும் கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகள் கவிதா (25) இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி காலையில் வயலுக்கு செல்வதாகக் கூறி சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், உறவினர், நட்பு வட்டாரங்களில் தேடியும் கவிதா கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கணவர் செல்வகுமார் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, யாராவது கடத்தி இருப்பார்களா? வேறு எங்கும் சென்றிருப்பாரா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி, மாயமான கவிதாவை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×