என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
Byமாலை மலர்13 Oct 2021 3:09 PM GMT (Updated: 13 Oct 2021 3:09 PM GMT)
குன்னம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சேட்டு முகமது (வயது 51). இவர் நெல் அறுவடை செய்யும் எந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில் நெல் அறுவடை எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் இருந்து எறையூர், பெருமத்தூர் வழியாக வேப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. வைத்தியநாதபுரம் பிரிவு சாலையில் துணை மின் நிலையம் அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட நிலையில், அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசில் சேட்டுமுகமதுவின் மனைவி ரகமானி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X