என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புஞ்சை புளியம்பட்டியில் தலையில் கல்லைபோட்டு கோவை தொழிலாளி படுகொலை
பு.புளியம்பட்டி:
கோவை மாவட்டம் அன்னூர் பொன்னே கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் தனது மகளை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வெங்கபாளையம் என்ற பகுதியில் திருமணம் செய்து கொடுத்தார்.
பின்னர் செல்வமும் தனது மகளுடனே தங்கி அந்த பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று வேலைக்கு சென்ற செல்வம் இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகள் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்த நிலையில் வெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் செல்வம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு பவானிசாகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது செல்வம் தலையில் ஹலோபிளாக் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்