search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கண்ணமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

    கண்ணமங்கலம் அருகே வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் புதிய காலனியை சேர்ந்தவர் காளி. அவரது மகன் விஜயகுமார் (வயது 38). இவர், நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்றார். பின்னர் அங்கு மக்காச்சோளம் மூட்டையை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்த விஜயகுமாருக்கு பிரியங்கா (26) என்ற மனைவியும், சங்கீதா (3) என்ற மகளும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.
    Next Story
    ×