என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்11 Sep 2021 12:33 PM GMT (Updated: 11 Sep 2021 12:33 PM GMT)
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோயை தடுப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக நர்சுகள், தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
இந்த கொரோனா தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
குறிப்பாக ரத்த அழுத்தம், சக்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி முகாமை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X