search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    ரே‌ஷன் அரிசி கடத்திய ஊழியர் சஸ்பெண்டு

    ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி 6 மூட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றவரை பிடிக்க விரட்டி சென்றனர்.
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையம் அருகே உள்ள யாகசாலை மண்டபத் தெருவில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஊழியராக செல்வம் உள்ளார்.

    இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக அரசு வழங்கும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை ரே‌ஷன் கடை விற்பனையாளர் வழங்குவதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி 6 மூட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றவரை பிடிக்க விரட்டி சென்றனர். பொதுமக்கள் துரத்துவதை கண்ட அரிசி கடத்தல்காரர் மூட்டைகளை ரோட்டிலேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ரே‌ஷன் கடையில் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து ரே‌ஷன் கடை ஊழியர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×