search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31,250 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 250 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வரை மாவட்டத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    கையிருப்புக்கு தகுந்தார்போல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சித்தோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 185 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 39 இடங்களிலும் என மொத்தம் 224 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

    மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக கல்லூரி மாணவ -மாணவிகள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    நேற்று நடந்த முகாமில் மொத்தம் 31 ஆயிரத்து 250 பேருக்கு டோக்கன் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முகாம் நடந்து வருவதால் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×