என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது
Byமாலை மலர்6 Sep 2021 10:38 AM GMT (Updated: 6 Sep 2021 10:38 AM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனூர், சிறுவயலூர், தெரணி, பிலிமிசை, இரூர், கூத்தூர், கொளக்காநத்தம், அல்லிநகரம், இலந்தைக்குழி ஆகிய 9 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர், செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோரையும், இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயசுதா (தேனூர்), ரேவதி (சிறுவயலூர்), ரமேஷ் (தெரணி), முத்துச்சாமி (பிலிமிசை), காந்திமதி (இரூர்), சுதா (கூத்தூர்), ராகவன் (கொளக்காநத்தம்), மருதமுத்து (அல்லிநகரம்), அகிலா (இலந்தைக்குழி) ஆகியோரை பாராட்டி நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் விருதுகளை வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X