search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    9 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது

    பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனூர், சிறுவயலூர், தெரணி, பிலிமிசை, இரூர், கூத்தூர், கொளக்காநத்தம், அல்லிநகரம், இலந்தைக்குழி ஆகிய 9 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர், செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோரையும், இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயசுதா (தேனூர்), ரேவதி (சிறுவயலூர்), ரமேஷ் (தெரணி), முத்துச்சாமி (பிலிமிசை), காந்திமதி (இரூர்), சுதா (கூத்தூர்), ராகவன் (கொளக்காநத்தம்), மருதமுத்து (அல்லிநகரம்), அகிலா (இலந்தைக்குழி) ஆகியோரை பாராட்டி நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் விருதுகளை வழங்கினார்.
    Next Story
    ×