என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரணாம்பட்டில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
Byமாலை மலர்4 Sep 2021 10:10 AM GMT (Updated: 4 Sep 2021 10:10 AM GMT)
பேரணாம்பட்டில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள மிட்டப்பல்லி கெம்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி (வயது 42). பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை 11 மணியளவில் பேரணாம்பட்டு டவுன் புத்துக் கோவில் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரத்தை துண்டித்து விட்டு பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் மின்சாரம் சரியாக துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பட்டாபி மயங்கிய நிலையில் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார்.
இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று பட்டாபியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் பட்டாபியின் மனைவி நிர்மலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே உள்ள மிட்டப்பல்லி கெம்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி (வயது 42). பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை 11 மணியளவில் பேரணாம்பட்டு டவுன் புத்துக் கோவில் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரத்தை துண்டித்து விட்டு பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் மின்சாரம் சரியாக துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பட்டாபி மயங்கிய நிலையில் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார்.
இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று பட்டாபியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் பட்டாபியின் மனைவி நிர்மலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X