என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று தொடங்கியது
Byமாலை மலர்1 Sep 2021 4:26 AM GMT (Updated: 1 Sep 2021 4:26 AM GMT)
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கோவில் உண்டியல்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆவணி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது.வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருமானம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் ஆவணி மாத பவுர்ணமி முடிந்ததை தொடர்ந்து நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கோவில் உண்டியல்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது.
இப்பணிகள் கோவில் இணை ஆணையர்வி.கே. அசோக்குமார், மேல்மலையனூர் உதவி ஆணையர் ராமு, கனரா வங்கி துணை மேலாளர் சிவராமன், கோவில் மணியக்காரர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் கோவில் ஊழியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காணிக்கை பணத்தை எண்ணி வருகின்றனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது.வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருமானம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் ஆவணி மாத பவுர்ணமி முடிந்ததை தொடர்ந்து நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கோவில் உண்டியல்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது.
இப்பணிகள் கோவில் இணை ஆணையர்வி.கே. அசோக்குமார், மேல்மலையனூர் உதவி ஆணையர் ராமு, கனரா வங்கி துணை மேலாளர் சிவராமன், கோவில் மணியக்காரர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் கோவில் ஊழியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காணிக்கை பணத்தை எண்ணி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X