search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி சட்டசபை
    X
    புதுச்சேரி சட்டசபை

    புதுச்சேரி சட்டசபையில் 26-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து கவர்னர் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி  மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின், பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான திட்ட வரையறை தயார் செய்து மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    இந்நிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்று காலை கவர்னர் உரை இடம்பெறும். தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். மாலையில் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.260 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. சில பணிகளுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. நகர பகுதிகளில் மின் விளக்கு மாற்றி அமைத்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கல்வே காலேஜ், வ.உ.சி. பள்ளிகளை பழமை மாறாமல் புனரமைக்க உள்ளோம்.

    கடற்கரை சாலையை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளிலும் நீட்டிக்கும் திட்டம் உள்ளது. இந்த சாலையானது வடக்கு பகுதியில் கோட்டக்குப்பம் எல்லை வரை நீட்டிக்கப்படும். இதேபோல் பார்க்கிங் திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர் விடப்படவுள்ளது. அண்ணா திடலை அழகான திடலாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்தப் பணிகளை செயல்படுத்தும்போது அது வெளியே தெரிய 6, 7 மாதங்கள் ஆகும். புதுச்சேரி நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பல பணிகளை தொடங்கியுள்ளோம் என கூறினார்.
    Next Story
    ×