search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் நடந்த வாலிபர் கொலையில் நண்பர்கள் 5 பேர் கைது

    கொலை செய்யப்பட்ட விக்னேஷ் யாருடன் வெளியே சென்றார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா, வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் புஜ்ஜி என்கிற விக்னேஷ் (வயது 24), பால் கறக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை கஸ்பா சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்தி வெட்டு காயங்கள் இருந்தன. தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், அவரை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கொலை செய்யப்பட்ட விக்னேஷ் யாருடன் வெளியே சென்றார் என போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கரிமுல்லா என்ற விஜயகுமார் (26), பெருமாள் நகரைச் சேர்ந்த விஷ்ணு (25), கஸ்பா சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சுபாஷ் (21), செல்வபுரத்தைச் சேர்ந்த நவீன் (20), கஸ்பா மசூதி தெருவைச் சேர்ந்த அசார் என்ற காஜாகவுஸ் முகைதீன் (23) ஆகியோருடன் வெளியே சென்றது தெரியவந்தது.

    போலீசார் 5 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன்விவரம் வருமாறு:-

    15-ந் தேதி இரவு விக்னேஷ் அவரது நண்பர்கள் விஜயகுமார் உள்பட 5 பேருடன் சேர்ந்து கஸ்பா சுடுகாட்டில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது விஜயகுமாரின் தங்கை குறித்து விக்னேஷ் கேலி செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை விஜயகுமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் கத்தியை எடுத்து விஜயகுமாரின் கையில் வெட்டினார். அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே விஜயகுமார் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பெரியகத்தியை எடுத்து வந்தார். அவர் விக்னேசை வெட்டியதாக தெரிகிறது. அவருடன் சேர்ந்து விஷ்ணுவும் கத்தியால் குத்தினார். இருவரும் வெட்டியதில் விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இந்த கொலைக்கு சுபாஷ், நவீன், அசார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்தது. இதை அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து விஜயகுமார் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×