என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடி அருகே கார் டயர் வெடித்து பைக் மீது மோதல்- 2 பேர் பலி
Byமாலை மலர்17 Aug 2021 9:14 AM GMT (Updated: 17 Aug 2021 9:14 AM GMT)
வாணியம்பாடி அருகே கார் டயர் வெடித்து பைக் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 25). டெய்லர்.
அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவரும் பைக்கில் வாணியம்பாடி நெடுஞ்சாலையில் உள்ள புத்துகோவில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டி ஓடி மணிகண்டன், ஜெயச்சந்திரன் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 25). டெய்லர்.
அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவரும் பைக்கில் வாணியம்பாடி நெடுஞ்சாலையில் உள்ள புத்துகோவில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டி ஓடி மணிகண்டன், ஜெயச்சந்திரன் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X