என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த மழை

    புதுச்சேரியில் 3-வது நாளாக மழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பாகூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் 3-வது நாளாக நேற்று இரவு 8 மணிக்கு மேல் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. பின்னர் மழை விட்டு விட்டு நள்ளிரவு வரை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரக்கிளை முறிந்து விழுந்தது. பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 3 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    வில்லியனூரில் இருந்து கீவளூர் செல்லும் சாலையில் 6 மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வில்லியனூர் துணை கலெக்டர் ரஷிதா குப்தா உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
    Next Story
    ×