என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்களமேடு அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
Byமாலை மலர்14 July 2021 6:17 PM GMT (Updated: 14 July 2021 6:17 PM GMT)
மங்களமேடு அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த மங்களம் கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி லட்சுமணன் நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்த பின்னர், கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் நேற்று காலை அவர் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். இதில், முதல் நாள் இரவில் மர்ம நபர்கள் கோவிலின் இரும்பு கதவு மற்றும் மரக்கதவில் இருந்த 2 பூட்டுகளையும், அங்கிருந்த சூலத்தால் உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பூசாரி லட்சுமணன், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X