என் மலர்
செய்திகள்

தற்கொலை
கீரமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கீரமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






