என் மலர்
செய்திகள்

தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே பெண் தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வனராஜ். இவருடைய மனைவி மணி (வயது 48). இவர்களுக்கு முனீஸ்வரி, மகேசுவரி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று இருவரும் தாய் வீட்டுக்கு வந்தனர். அப்போது மணிக்கும், அவருடைய மகள்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த மணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story






