என் மலர்
செய்திகள்

மரணம்
கீழ்வேளூர் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி மரணம்
கீழ்வேளூர் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை உடைந்ததால் தடுமாறி மரத்தில் இருந்து ரமேஷ் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






