search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    திட்டக்குடி அருகே சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரி பொது மக்கள் தர்ணா போராட்டம்

    திட்டக்குடி அருகே சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரி பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோடங்குடி ஊராட்சியில் 4 -வதுவார்டில் சாக்கடை கால்வாய்கடந்த 10 வருடங்களாக தூர் வார கோரி மங்களூர் ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்றத்திலும், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வில்லை மேலும் தெருவில் உள்ள சாக்கடை தூர் வாராமல் உள்ளதால் சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் சாக்கடை சாலையில் நடந்து செல்லும் அவல நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

    இதைப்பற்றி எந்த அரசு அதிகாரிகளும் சரி செய்ய முன்வரவில்லை என கூறி சாக்கடை செல்லும் தெருக்களில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தனர் சாக்கடை செல்லும் அனைத்து தெருக்களிலும் முறையாக அளவீடு செய்து கால்வாய் சரிசெய்து தரப்படும் என உறுதி அளித்ததாக போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தைகை விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×