என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கங்களாஞ்சேரி, மேலப்பூதனூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

    திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் வர்த்தக சங்கம், கங்களாஞ்சேரி ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் வர்த்தக சங்கம், கங்களாஞ்சேரி ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.டி.எஸ்.சரவணன் முகாமை தொடங்கி வைத்தார்.இந்த முகாமை மாவட்ட கவுன்சிலர் சரபோஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் 293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் பாஸ்கரன், விஜய், கவுசல்யா முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதாராஜன், ஊராட்சி செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் இளஞ்செழியன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் 262 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற துணை தலைவர் பூமிநாதன், ஊராட்சி செயலாளர் அனிதாராணி, சுகாதார ஆய்வாளர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார் .இதில் 349 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் கவுசல்யா, விஜய், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×