என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர், சிவகாசியில் மழை
Byமாலை மலர்2 July 2021 7:30 AM GMT (Updated: 2 July 2021 7:30 AM GMT)
கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
விருதுநகர்:
சமீபகாலமாக மழை மறைவு பிரதேசமாக நீடித்து வரும் விருதுநகரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களில் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இதனால் பயணிகளுக்கும், பஸ் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் நகரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்த 1 மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
சமீபகாலமாக மழை மறைவு பிரதேசமாக நீடித்து வரும் விருதுநகரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களில் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இதனால் பயணிகளுக்கும், பஸ் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் நகரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்த 1 மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X