என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருவெண்காட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்

    திருவெண்காட்டில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.
    திருவெண்காடு:

    திருவெண்காட்டில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சீர்காழி வட்டாரத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, பூம்புகார், காத்திருப்பு, வள்ளுவகுடி மற்றும் சீர்காழி ரூரல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து செய்து வருகிறது என்றார். ஆய்வின்போது டாக்டர் அமிழ்தினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர் ரங்கராஜன், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மனோஜ்குமார், வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். முகாமில் 220 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×