என் மலர்
செய்திகள்

தற்கொலை
பர்கூர் அருகே ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை
பர்கூர் அருகே ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் ஜெகதேவி அருகே உள்ள சாப்பமுட்லு பகுதியை சேர்ந்தவர் சாதிக் (வயது 30). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சாதிக் சத்தலப்பள்ளியில் உள்ள மாந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






