என் மலர்
செய்திகள்

கைது
பாரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
பாரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
பாரூர் போலீசார் அரசம்பட்டி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாலனம்பதி பாண்டியன் (வயது 26), அரசம்பட்டி சரத்குமார் (28), ராஜேஷ் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார் ஒபகவலசை ஏரி பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மிட்டப்பள்ளி மூர்த்தி (44), குணசேகரன் (35), ஜெயக்குமார் (43), உத்திரகுமார் (48) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






