என் மலர்
செய்திகள்

மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி
மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவரங்குளம்:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அழகப்பா நகரில் வசித்து வந்தவர் கருப்பையா (வயது 48). இவர், திருவரங்குளம் அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனால், மின் பாதையில் ஏற்பட்ட பழுதை மின் வாரிய ஊழியர்களுடன் சென்று மின்மாற்றியில் ஏறி கருப்பையா பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே, சக ஊழியர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






