என் மலர்
செய்திகள்

தற்கொலை
வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 75). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் சரியாக கவனிக்காததால் மனமுடைந்து வீட்டில் பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story