search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஊத்தங்கரையில் டீக்கடைக்காரர் தற்கொலை

    ஊத்தங்கரையில் டீக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 50). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முனியப்பனின் மனைவி உண்ணாமலை குடியை நிறுத்துமாறு பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை. இந்தநிலையில், நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த முனியப்பன், தான் நடத்தி வரும் டீக்கடையில் தூக்கில் தொங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×