என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன
Byமாலை மலர்17 Jun 2021 10:07 AM GMT (Updated: 17 Jun 2021 10:07 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன. 25 இடங்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என அரசு அறிவித்ததை அடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வரப்பெற்ற தடுப்பூசிகள் நேற்று முன்தினத்துடன் தீர்ந்து போனது. இதனால் முகாம்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வேலூர் மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்காக தடுப்பூசிகள் வரவழைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இன்று (நேற்று) அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள் என 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும். பொதுமக்கள் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், என்றனர்.
வேலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன. 25 இடங்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என அரசு அறிவித்ததை அடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வரப்பெற்ற தடுப்பூசிகள் நேற்று முன்தினத்துடன் தீர்ந்து போனது. இதனால் முகாம்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வேலூர் மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்காக தடுப்பூசிகள் வரவழைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இன்று (நேற்று) அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள் என 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும். பொதுமக்கள் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X