search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    வந்தவாசி, போளூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

    சின்னபுஷ்பகிரி, வெள்ளூர், காளசமுத்திரம், களம்பூர், கஸ்தம்பாடி, எடப்பிறை, கொரால்பாக்கம் ஆகிய 9 இடங்களில் 706 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    வந்தவாசி:

    வந்தவாசி அருகே மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வழூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருந்தாளுனர் மணிகண்டன், அன்பு, குமார்,செவிலியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் முகாமை தொடங்கி வைத்தார். போளூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் மிஸ்ஸியம்மா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன் வரவேற்றார்.

    மேலும் போளூர், சின்னபுஷ்பகிரி, வெள்ளூர், காளசமுத்திரம், களம்பூர், கஸ்தம்பாடி, எடப்பிறை, கொரால்பாக்கம் ஆகிய 9 இடங்களில் 706 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் ஊராட்சியில் சின்னபுஷ்பகிரி பள்ளியிலும், வெள்ளூர் கிராமத்தில் காலனி பள்ளியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் இளங்கோவன், அக்‌ஷிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர் அருண் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு 140 பேருக்கு தடுப்பூசி போட்டனர். காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மந்தைவெளி பகுதியில் டாக்டர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் 105 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.

    செங்கம் தாலுகாவில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 668 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×