என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்ளிடம், பொறையாறு பகுதிகளில் 590 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்7 Jun 2021 12:47 PM GMT (Updated: 7 Jun 2021 12:47 PM GMT)
புதுப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறி கடைகளை திறந்து வைத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புதுப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 60 வாகனங்களை புதுப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்து, வாகனம் ஓட்டி வந்த 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறி கடைகளை திறந்து வைத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்த 30 இருசக்கர வாகனங்களை கொள்ளிடம் போலீசார் பறிமுதல் செய்து 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விதிகளை மீறி திறந்து வைத்திருந்த இரண்டு கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல பொறையாறு, செம்பனார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஊடரங்கை மீறி சாலைகளில் காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தனர். அவ்வாறு சுற்றித்திரிந்தவளின் 500 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X