search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமி நாசினி தெளிப்பு
    X
    கிருமி நாசினி தெளிப்பு

    சீர்காழி தென்பாதியில் கிருமி நாசினி தெளிப்பு

    சீர்காழி தென்பாதி வ.உ.சி தெற்கு தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சீர்காழி:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் தினம் தோறும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி வ.உ.சி தெற்கு தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் புத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்தநிலையில் நேற்று சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி உத்தரவின் பெயரில் களப்பணி உதவியாளர் சீதாலட்சுமி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் வ.உ.சி தெற்கு தெருவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெரு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×