என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழி தென்பாதியில் கிருமி நாசினி தெளிப்பு
Byமாலை மலர்6 Jun 2021 3:08 PM GMT (Updated: 6 Jun 2021 3:08 PM GMT)
சீர்காழி தென்பாதி வ.உ.சி தெற்கு தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் தினம் தோறும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி வ.உ.சி தெற்கு தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் புத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்தநிலையில் நேற்று சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி உத்தரவின் பெயரில் களப்பணி உதவியாளர் சீதாலட்சுமி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் வ.உ.சி தெற்கு தெருவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெரு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X