என் மலர்
செய்திகள்

தற்கொலை
மத்தூர் அருகே பெண் தற்கொலை
மத்தூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் மங்களவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த ஜிஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாயாவதி (25) என்பவருக்கும் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர்கள் ஜிஞ்சம்பட்டி, சொரங்கம்வட்டத்தில் தற்போது வசித்து வந்தனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவனுடன் கோபித்துக் கொண்ட மாயாவதி, ஜிஞ்சம்பட்டியிலுள்ள தன் தாய் வீட்டிற்கு வந்தார். விரக்தியுடன் காணப்பட்ட மாயாவதி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயாவதி உயிரிழந்தார். இதுகுறித்து மாயாவதி அண்ணன் மனோகரன் அளித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






