என் மலர்
செய்திகள்

கைது
கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் ஆழியூர்-பெருங்கடம்பனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடு்பட்டனர். அப்போது பெருங்கடம்பனூர் பஸ் நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகூர் தைக்கால் தெருவை சேர்ந்த செய்யது முஸ்தபா மகன் அப்துல் ரகுமான் (வயது 20) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






