என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை ஆரணி உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை ஆரணி உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் - உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்

    ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்தார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், அனைத்து அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி.மூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆ.பெ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    முகாமை ஆரணி உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் தாசில்தார் செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கீழ்பென்னாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 214 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய ஆணையாளர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) குருமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக ஆவூர் கிராமத்தில் நடந்த தடுப்பூசி போடும் முகாமையும் திட்ட இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜபாரி உடனிருந்தார்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிவளாகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

    இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்தோடு வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    இப்பணிகளை சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார், குப்பம் ஊராட்சி தலைவர் அனிதாமுரளி, கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள ரமணா மறுவாழ்வு இல்லத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட மனநலம் குன்றியவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமில் மனநலம் குன்றியவர்கள் உள்பட தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரமேஷ்குமார், மருத்துவ அலுவலர் அனிதா, சுகாதார ஆய்வாளர் சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வந்தவாசி அருகே இந்திரா நகரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை தாசில்தார் திருநாவுக்கரசு ஆய்வு செய்து, டாக்டர் ஷோபனாவிடம் சுகாதாரம் மற்றும் போதிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனம், உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், மேற்பார்வையாளர் அன்பு மற்றும் செவிலியர்கள், சாத்துமங்களம் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா மூர்த்தி, துணை தலைவர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×