என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு கடந்த ஆட்சியாளர்களே காரணம் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.
அப்போது கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது :-
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, 28,000 தடுப்பூசிகள் நேற்று வந்துள்ளன. நாளை (இன்று) முதல் தடுப்பூசிகள் செலுத்தப்படும். உலகத்திலேயே, ஆட்சிக்கு வந்தவுடன் போர்கால அடிப்படையில், எந்த அரசும் இது போன்று வேலைகளை செய்ததில்லை.
ஆனால், முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார். ஒரு சிறிய குறை இருந்தாலும் அதை கேட்டு நிவர்த்தி செய்வதற்கு தான், முதல்- அமைச்சர் எங்களை அனுப்பி வைத்துள்ளனார். தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் முதல்- அமைச்சருக்கு உள்ளது.
கடந்த 7-ந் தேதி தான் ஆட்சி பொறுப்பேற்றோம். அதற்குள் இவ்வளவு வேலைகள் நடக்கிறது என்றால் உலக அளவில் பாராட்ட வேண்டும். கொரோனா இவ்வளவு பரவியதற்கு என்ன காரணம். கடந்த ஆட்சியாளர்கள் 2 மாதமாக ஏதாவது செய்தார்களா? தேர்தல் நேரத்தில் இருந்து எதுவும் செய்யாததால் தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதையெல்லாம் நாங்கள் வெளியே கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






