search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள புலிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா(வயது 58).விவசாயி. முத்தையா தனது மகன் வினோத்குமாருடன் தேவகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் மாவிடுதிகோட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மகன் வினோத்குமார் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்று விட்டார். முத்தையா ரோட்டில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குமானி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் திருவாடானையில் இருந்து தேவகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் ரோட்டில் நடந்து சென்ற முத்தையா மீது மோட்டார் சைக்கிளோடு மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×