search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடலூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    கடலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் பாரதிசாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வாடகை பாத்திரக்கடை முன்பு வண்டிப்பாளையத்தை சேர்ந்த கணேசன் (வயது 78) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், ரூ.120 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் வாய்க்கால் சந்து பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, அங்கு கண்ணகிநகரை சேர்ந்த ஜோதி (51) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×