என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டை அருகே பள்ளி மாணவருக்கு கொரோனா
Byமாலை மலர்29 April 2021 1:17 PM GMT (Updated: 29 April 2021 1:17 PM GMT)
தேவகோட்டை அருகே 10ம் வகுப்பு பள்ளி மாணவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு அழைத்தபோது தப்பி ஓடியதால் அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வந்த அலுவலர்கள் அவரை அழைத்தபோது அச்சத்தில் அவர்களிடம் இருந்து தப்பிஓடி வயல்காட்டு பகுதியில் சுற்றி திரிந்தார்.
அவரை தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம் தலைமையில் கிராம உதவியாளர்கள், அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை வேலாயுதபட்டினம் மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்தனர். அதன் பின்னர் நேற்று அமராவதி புதூர் மருத்துவமனைக்கு மாணவரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரோடு பழகிய நபர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் அந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X